பட்டாசு விற்பனை அதிகரிப்பு!

கடந்த ஆண்டினை விட இவ்வருடம் நாட்டில் பட்டாசு விற்பனை 90 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில்  கருத்து வெளியிட்டுள்ள அவர்  பட்டாசு விற்பனை அதிகரித்துள்ள போதிலும்  வானவெடி, விசில் பட்டாசு போன்றவற்றின் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த இதேவேளை, பட்டாசு வெடிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் தரப்பினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் விபத்துக்களை தவிர்த்து கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!