சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் சட்டமாகிறது..! ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்

சீர்குலைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான உடனடித் தீர்வு சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டமே எனத் தெரிவித்த ஜனாதிபதி,

அதன் பயனை மக்களுக்கு வழங்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சட்டமாக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் அனைத்து துறைகளும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக புதிய சட்ட முறைமையொன்று கொண்டுவரப்படும்.

அந்த செயற்பாடுகளுக்கு சட்டத்துறையில் உள்ள அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!