கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!

ஈச்சலம்பற்று பொலிஸ் பிரவுக்குட்பட்ட இறங்குதுறை பகுதியில் இன்று (03) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இறங்குதுறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஒரு குழுவினரால் குறித்த, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஈச்சலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையுடன் தொடர்புடையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஈச்சலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்குது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!