பிரதமர் நரேந்திர மோடி 50 முறை தமிழகத்துக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது-வைகோ!

பிரதமர் நரேந்திர மோடி ஐந்து முறை அல்ல, 50 முறை தமிழகத்துக்கு வந்தாலும் திராவிடத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் திருச்சியில், கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது கட்சி வேட்பாளருடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்

மேலும் அவரின் அமைப்பில் இருந்த பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.என்றும் இம்முறை மதிமுக திருச்சியில் மிகப்பெரிய வெற்றி பெறுவதுடன் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!