நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் : வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனினும், மேல் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டின் பல பாகங்களில் இன்றையதினமும் வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது பொது மக்கள் உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றுமாறும் குறித்த திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!