பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் தொடர்பில் அறிவிப்பு!

400 புகையிரதக் கடவைகளை நிறுவ ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த ஆட்சேர்ப்புகளுக்கு இணக்கம் காணப்பட்டதாக புகையிரத பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார தெரிவித்துள்ளார்

அதன்படி 1200 பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அரசாங்கத்தின் பல் பணி திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பாதுகாப்பு கதவுகள் இல்லாத அதிக எண்ணிக்கையில் புத்தளம் வீதி மற்றும் கரையோரப் புகையிரதப் பாதைகள் உள்ளதுடன் சில கடவைகளுக்கு பொலிஸார் வாயில்களை பொருத்தியிருந்த போதிலும், புத்தளம் ஆராச்சிக்கட்டுவ மையாவ புகையிரத கடவையில் அண்மையில் இடம்பெற்ற விபத்தின் பின்னர், அந்த கதவுகள் அகற்றப்படும் என பொலிசார் தெரிவித்ததாக ரயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!