போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி அதிக விலைக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்த ரத்மலானை காலி வீதியில் அமைந்துள்ள மருந்துக் கடையொன்றை சுற்றிவளைத்து அதன் உரிமையாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரர்லு; கைது செய்யப்பட்டுள்ளார்.

மருந்துக் கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

யுக்திய நடவடிக்கை நடைபெற்றுக்கொண்டிருப்பதால் போதைப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மவுண்ட் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் வழங்கிய தகவலின்படி போதைக்கு அடிமையான பலர் தொடர்ந்து இந்த மருந்துக் கடைக்கு வருவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டடுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!