மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ் பல்கலைக் கழக மாணவன் உயிரிழப்பு!

யாழ்.நீா்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்.பல்கலைகழகத்தைச் சேந்ந்த ரமேஷ் சகீந்தன் என்ற 22 வயதான மாணவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை குறித்த மாணவர் தனது வீட்டிலிருந்து நீா்வேலி நோக்கி மோட்டாா் சைக்கிளில் பயணித்த வேளை வீதியின் குறுக்காக நாயொன்று பாய்ந்ததில் இவ் விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  படுகாயமடைந்த மாணவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில்  குறித்த சம்பவம் தொடா்பாக கோப்பாய் பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!