நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக யாழ். மாவட்ட நீரியல்வள திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் குறித்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் மீனவர்களின் 2 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டிருந்தது.

மேலும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 46 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 8 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!