உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இரத்துச்செய்யப்பட்ட உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடப் பரீட்சை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், குறித்த பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், அது கிடைக்காத பட்சத்தில் இணையத்தளத்திற்கு பிரவேசித்து அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், பரீட்சார்த்திகள் இரத்து செய்யப்பட்ட பரீட்சைக்கு தோற்றிய அதே பரீட்சை நிலையத்தில் புதிய வினாத்தாளுக்கு தோற்றினால், அனுமதி அட்டை தேவையில்லை என்றும் மேலதிக தகவல்களை பரீட்சை திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!