வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவின் பலடுபான பிரதான நுழைவாயில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக ஊவா வலய வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உபுல் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.
யால தேசிய பூங்காவில் உள்ள சிறு நீர்ப்பாசன குளங்களில் கசிவு ஏற்பட்டதால் நுழைவாயில்கள் நீரில் மூழ்கியதை அடுத்து அங்கு அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது.
பூங்காவிற்குள் உள்ள பிரதான வீதி வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டுள்ளதுடன், வீதிகள் திருத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.