முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை தனிப்பட்ட விஜயமாக இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.
இந்த ஆண்டில் ஒரு மாத கால இடைவெளிக்குள் அவர் இரண்டாவது தடவையாக இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது பல்வேறு முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.
குறிப்பாக எதிர்வரும் 27ஆம் திகதி இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவேந்தல் உரையை ஆற்றவுள்ளார். இந் நிகழ்வு டில்லியிலுள்ள இந்திய ஹாபிடேட் சென்டர் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஒரு வார இந்திய விஜயத்தின் போது, அந்நாட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிடவுள்ளார். அது மாத்திரமின்றி முக்கிய இரகசிய அரசியல் சந்திப்புக்களிலும் அவர் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.