நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தேசிய நல்லிணக்கம் அவசியம் – நீதி அமைச்சர்

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

இரண்டு நாள் உத்தியோகப்பூவரவ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள அவர், ஆரியகுளம் நாக விகாரையில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

தற்போதைய ஜனாதிபதி மிகவும் இக்கட்டான காலத்தில் நாட்டினை பொறுப்பெடுத்து முன்னோக்கி கொண்டு செல்வதால் தற்பொழுது நாட்டில் சுமுகமான நிலை காணப்படுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

நாட்டில் இனங்களுக்கு இடையேயும் மதங்களுக்கு இடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் நாட்டினை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் விஜயதாச ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!