அமெரிக்கத் தூதுவர் – வடக்கு ஆளுநர் சந்திப்பு!

வடமாகாண அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே. சுங் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே. சுங், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அமெரிக்கத் தூதுவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து தூதுவருக்கு விளக்கமளித்த ஆளுநர், மீள்குடியேற்றம், விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட மக்களின் பொதுவான உட்கட்டமைப்புகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், மக்களின் நல்வாழ்வுக்காக கடந்த சில வருடங்களாக அமுல்படுத்தப்பட்ட வேலைத் திட்டங்கள் குறித்த உண்மைகளை சுட்டிக்காட்டிய ஆளுநர், இலங்கையின் அன்றாட செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்திகளில் திருப்தியடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண மக்களுக்காக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இரண்டாவது தடவையாக வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை குறித்தும் அவருக்கு நல்வாழ்த்துக்களை அமெரிக்க தூதுவர் கூறியிருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!