இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது.
நெடுந்தீவுக்கு அருகே நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களின் படகை அவதானித்துள்ளனர். அதிலிருந்த ஒன்பது மீனவர்களைக் கைது செய்ததுடன், அந்தப் படகையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம்
ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மேலுமொரு படகும் வெறுமையாக கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகு தொடர்பிலும் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.