யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த வழக்கைத் தொடர்வதற்குப் பொலிசாருக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்குத் தொடர்பில், கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது பொலிஸாரின் வழக்கிடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்குட்படுத்தி இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்படப் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகி நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த வழக்கை தள்ளுபடி செய்தது.