தையிட்டி விகாரையை அகற்றக் கோரி மூன்றாவது நாளாகத் தொடர்கிறது போராட்டம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் அனுமதி பெறப்படாமல் – சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

வெசாக் தினமான இன்று மழைக்கு மத்தியிலும் போராட்டகாரர்கள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

14 குடும்பங்களுக்கு சொந்தமான, அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும், சட்ட விரோதமாக கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், பௌத்த மயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!