ஹமாஸின் கோரிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு!

காஸாவில் விமானங்களிலிருந்து பரசூட்மூலம் உதவிப்பொருட்களை விநியோகிப்பதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரியுள்ள நிலையில் அமெரிக்கா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

காஸாவில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக விமானங்களிலிருந்து
பரசூட் மூலம் உதவிப்பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இந்த உணவுப் பொதிகளை பெறுவதற்கான முயற்சிகளில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பரசூட் மூலம் பொதிகளை இறக்குவதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு பதிலாக, தரை வழியாக அதிகளவு விநியோகங்களுக்கு இஸ்ரேல் அனுமதிக்க வேண்டுமெனவும் ஹமாஸ் கோரியுள்ளது.

எனினும், வான் வழியான விநியோகம் என்பது காஸாவிலுளள பலஸ்தீன மக்களுக்கு உதவிகளை விநியோகிப்பதற்காக அமெரிக்கா கையாளும் வழிகளில் ஒன்று எனவும், அதை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுக்கும் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதிக்கு பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 அயிரத்து 490 ஆக அதிகரித்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!