உள்ளூராட்சி சபைகளுக்கான புதிய எல்லை நிர்ணய அறிக்கையின்படி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 714 ஆக்க் குறைக்கப்படுகிறது.
தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய தேசிய குழு தனது அறிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இன்று கையளித்தது.
தற்போது 8 ஆயிரமாக உள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
