ஐ.எம்.எஃவ் கடன் வசதியின் முதலாவது கொடுப்பனவு இரண்டு நாள்களில் கிடைக்கும்!

சர்வதேச நாணய நிதியத்தினால், நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியின் முதல் தவணை இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதி தொடர்பாகச் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்நிலை ஊடக விபரிப்பின் போதே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடக விபரிப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் இலங்கைக்கான தூதரகத் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத்தினால், நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு 333 மில்லியன் டொலர்கள் நிதி உதவி வழங்கப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெறவுள்ளது. இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலரை முதல் தவணைப் பணமாக இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது. 48 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு இந்தக் கடன் தொகை வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!