பிக்கு சுட்டுக்கொலை – மூவர் கைது!

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜோதிடத்தில் புகழ் பெற்ற 44 வயது மதிக்கத்தக்க கலபாலுவாவே தம்மரதன என்ற பிக்குவே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

காரில் வந்த 4 பேர் தங்களை சிஐடி அதிகாரிகள் என்று கூறி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!