சட்டவிரோதமாக உள் நுழைந்து வீடொன்றை உடைத்து தரைமட்டமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சாவகச்சேரியில்இடம் பெற்றுள்ளது.
ஜேசீபி இயந்திரத்தைப் பயன்படுத்தி வீடு உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. காணி உரிமைப் பிரச்சினையே சம்பவத்துக்கான காரணம் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகச் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டை உடைக்க பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தையும், சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சாவகச்சேரிப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.