யாழ்ப்பாணக் கடற்பரப்பரப்பினுள் அத்துமீறி, உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் – புதுக்கோட்டை மற்றும் நாகை பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் கடற் பரப்பில் நான்கு மீனவர்ளும், பருத்தித்துறைக் கடற்பரப்பில் 12 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களது இரண்டு படகுகளும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வளத்துறை திணைக்களத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர். இவர்களில் 12 பேரைப் பருத்தித்துறை நீதிமன்றிலும், 4 பேரை ஊர்காவற்றுறை நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்துவதற்குக் நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.