கொழும்பில் தேசிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களில் காயமடைந்துள்ளள பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளுராட்சி சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியினர் இன்று விகாரமாதேவி பூங்கா தொடக்கம் நகர மண்டப சுற்றுவட்டம் வரை பேரணியாக சென்று எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டகாரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை, நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டு போராட்டத்தை கலைத்தனர்.