யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று பணிப் புறக்கணிப்பு ஓன்று இடம்பெற்றது.
தேசிய சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பணிப் புறக்கணிப்புக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே இந்தப் பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக நேரக் கொடுப்பனவை வரையறுத்தல் தொடர்பான சுற்றறிக்கையை நீக்குதல், மின் கட்டணத்தைக் குறைத்தல் உட்பட தேசிய சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு முன்வைத்த 8 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலுமுள்ள அரச மருத்துவமனைகளில் இன்று காலை 7 மணி முதல் 12 மணிவரை பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.