15 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

ஹட்டன் பொலிஸ் எல்லைக்குட்பட்ட லெடன்டி தோட்டத்தின் மார்ல்ப்ரோ பிரிவை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஹட்டன் வலயக் கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் ஹட்டன் பன்மூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ஆர்.கோபி ஹர்ஷன் என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவன் தனது தாயாருடன் தோட்ட ஆலயத்தில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு கடந்த 30 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் வீடு திரும்பிய போது வீட்டின் சமையலறைக்கு அருகில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்ஓயா ஆரம்ப வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!