வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலைய வாகனத்தின் மீது, தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நபரொருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபரொருவரை கைது செய்வதற்காக பொலிஸார், வானத்தில் சென்றுள்ள போதே, வீதியில் நின்ற குறித்த நபரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபரைக் கைது செய்த புளியங்குளம் பொலிஸார்,அவரை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.