பண்ணைக் கடலில் பெண்ணொருவரின் சடலம்!

யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இன்று மாலை இந்தச் சடலம் கடலில் மிதந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

பண்ணைக் கடலில் சடலமொன்று மிதந்து வருவதைக் கண்ட பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் பொலீசாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் யாழ்பாணம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!