நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்..!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதியில்  நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (12)  நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்  இன்று சனிக்கிழமை (13) காலை  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நண்பர்களுடன் நீராடச் சென்ற வாழைச்சேனை கோழிக்கடை வீதியைச் சேர்ந்த  17 வயதுடைய  சிறுவனே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.

நேற்று (12) கல்குடா சுழியோடிகள் தேடுதல் மேற்கொண்ட போதும் சிறுவன்  மீட்கப்படாத நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு,

மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!