மோட்டார் சைக்கிள்கள் மோதி இளைஞர் பலி!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி , சங்கத்தானை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றது.

பாதையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பிறிதொரு மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளாதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் சாவகச்சேரி, சங்கத்தானையைச் சேர்ந்த 27 வயதுடைய சண்முகலிங்கம் பிரகாஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மரண விசாரணைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!