ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி அநுர உரை?

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா. பொதுச்சபையின் 80ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார விரைவில் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார். இந்தக் கூட்டத் தொடரிலேயே ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஜின் பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடனும் அநுர இருதரப்புப் பேச்சில் ஈடுபடவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!