முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் வழக்கு விசாரணை ஒன்றுக்கு முன்னலையாகத் தவறியதன் காரணமாகவே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது பிடியாணை பிறப்பிக்கபட்டுள்ளது.
வரத்தக அமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் சதொச நிறுவனத்தின் பணியாளர்கள் 153 பேரை உத்தியோகபூர்வ கடமையிலிருந்து விலக்கி தனிப்பட்ட பணிகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்னிலையாகாத நிலையில் அவரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.