ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று புதன்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.
இன்றிரவு 7.30 மணிக்கு இந்த விசேட உரை அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பில் அநுர குமார திசாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.