இல்மனைற் அகழ்வுக்கு எதிர்ப்பு – மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அருகே பதற்றம்!

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக பொதுமக்களால் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில்  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டம் நிறைவடைந்ததும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரிடம் தமது கோரிக்கையினை முன்வைப்பதற்காகச் சென்றுள்ளனர்.

இதன்போது மாவட்ட செயலகத்தில் இல்மனைட் அகழ்வு மற்றும் இரால் பண்ணைகளுக்கு ஆதரவானவர்கள் நின்றிருந்ததால்
இரண்டு பிரிவினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!