ஜானாதிபதிக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கும் வகையில் ஜானாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு வேட்பாளரை தெரிவு செய்வதில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளது 

இவ்வாறனதொரு நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி தீர்மானம் எடுக்க எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் இருவரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு பஷில் ராஜபக்ஷ கடந்த டிசெம்பர் மாதம் அமெரிக்காவுக்கு சென்றிருந்துடன் ஜனவரி மாதம் இறுதியில் நாடு திரும்புவதாக இருந்த போதிலும் இதுவரையில் பஷில் ராஜபக்ஷ நாட்டுக்கு வரவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் இவ்வாரம் இறுதியில் அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜனாதிபதி வேட்பாளரை மையப்படுத்தி ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை சமநிலைப்படுத்தவே பஷில் ராஜபக்ஷ நாடு திரும்புவதாக அந்த தகவல்கள் மேலும் கூறியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!