சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவோம்..! எதிர்க்கட்சி அறிவிப்பு

தாம் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்து இணைந்து செயற்படுவதாகவும், இலங்கையுடனான தற்போதைய ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்யப்போவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி பொது மக்கள் மீது அதிக வரிகளை விதிக்கும் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கும் சரத்துகளில் திருத்தங்களை தேசிய மக்கள் சக்தி விரும்புவதாக ஹேரத் கூறியுள்ளார்.

இதேவேளை தமது கட்சிக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கவலையடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!