கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – இன்றும் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று 32 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும் அரசாங்கம் இதற்கு உரியதீர்வினை வழங்காது தொடர்ந்து மௌனம் காத்து வருவது தொடர்பாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வருகின்ற சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கணடித்தும், திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அரசாங்கம் இனியும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிவழிப் போராட்டம் தொடரும் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!