மின்னல் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு!

அத்திமலே, கொட்டியாகல பிரதேசத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த வேளையிலேயே அவர் இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவர் 65 வயதுடைய கெகெலான, கொட்டியாகல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை அத்திமலே பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!