புகையிரத சேவைகள் ரத்து!

இன்று (செவ்வாய்கிழமை) 6 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

என்ஜின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பற்றாக்குறையால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்குச் சென்ற மக்கள் பணியிடங்களுக்குத் திரும்புவதற்காக இன்றும் கூடுதலான ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் புத்தாண்டுக்காக கிராமங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்காக கடந்த 14ஆம் திகதி முதல் மேலதிக புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!