இலங்கைக் கடற்படை மீது தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு!

”இலங்கை கடற்படையினர் தமது படகினை சேதப்படுத்தியதுடன் தம்மையும் தாக்கியுள்ளதாக” இராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டு பெற்று சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றதாக இராமேஸ்வரம் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடப்படையானது ஒரு விசைப்படகின் மீது மோதி சேதப்படுத்தியதாகவும், இதனால் படுகாயம் அடைந்த குறித்த மீனவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பி உள்ளதாகவும் இராமேஸ்வரம் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலைத்  தடுப்பதற்கு இலங்கை கடற்படையினர் நடவடிக்கையினை எடுத்து வருகின்ற நிலையில் இராமேஸ்வரம் மீனவர்கள் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!