வவுனியா ஓமந்தையில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்து – ஒருவர் பலி..!!

வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் நேற்று (06) காலை 10.30மணியளவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியாயூடாக யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதம் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஓமந்தை பன்றிகேய்தகுளம் பகுதியில் புகையிரத கடவையினை கடக்க முயன்ற பிக்கப் ரக வாகனம் புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் பிக்கப் ரக வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

மன்னார் நானாட்டன் பகுதியினை சேர்ந்த 32வயதுடைய ராஜன் நிரோஜன் என்பரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் புளியங்குளம் பொலிஸார் விபத்துச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!