அவுஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டுள்ள மாணவர்களின் கவனத்திற்கு!

அவுஸ்திரேலியா,  வெளிநாட்டு மாணவர்களுக்கான  விசேட விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு வருகைதரும் குடியேற்ற வாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ள நிலையிலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால்  வாடகை வீட்டுகளுக்கான போட்டியும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது பட்டதாரி விசாக்கள் மற்றும் மாணவர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன, மேலும் சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிறுவனங்கள் தொடர்ந்து விதிகளை மீறினால் அவற்றை இடைநிறுத்துவதற்கு அஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!