மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட துமிந்த நாகமுவ, லஹிரு வீரசேகர மற்றும் ரத்கராவே ஜினரதன தேரர் ஆகியோரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் இன்று (புதன்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ஆம் திகதி கொழும்பில் மக்கள் போராட்ட இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இந்தக் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டம் இந்திய மேலாதிக்கம், பொருட்களின் விலையேற்றம், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த போராட்டம் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!