மதரஸா மாணவனின் மர்ம மரணம்- மௌலவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு,காத்தான்குடிப் பகுதியைச்  சேர்ந்த 13 வயதான மாணவனொருவன் மதரஸாவொன்றில்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று (20) கல்முனை நீதிமன்ற நீதிவான்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே  சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 திகதி வரை குறித்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!