பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று  கனேமுல்ல பிரதேசத்தில்  இடம்பெற்றுள்ளது.

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று குறித்த நபருக்கும் பொலிஸாருக்கும் இடையே  இடம்பெற்ற மோதலில் அந்நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் ராகம வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தாக்குதலில் காயமடைந்த  பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!