இரு பிள்ளைகளையும் கொன்று விட்டு தன் உயிரையும் மாய்க்க முயன்ற தந்தை!

தந்தை ஒருவர் தனது இரு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பகுதியில் இடம்பெற்றுள்ளது.

29 வயதான மகனையும் 15 வயதான மகளையுமே  அவர் இவ்வாறு கொலை செய்துள்ளார் எனவும் அதன் பின்னர் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்  கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளும் மன வளர்ச்சி குன்றியவர்கள் எனவும்
பிள்ளைகளின் தாய் அண்மையில் உயிரிழந்த நிலையிலேயே, இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான  மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!