யாழ் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு இன்று ஆரம்பம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான சி.பத்மநாதன் தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பு விழா இன்று தொடக்கம் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு 8 அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

இதன்போது 2 ஆயிரத்து 873 பேருக்கான பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் சகல கற்கை நெறிகளுக்குமாக 46 தங்கப் பதக்கங்கள், உள்ளடங்கலாக 9 புலமைப் பரிசில்கள் மற்றும் 48 பரிசில்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!