யாழில் மரதன் ஓடிய வீரருக்கு உற்சாகம் அளித்த இளைஞனை மோதித் தள்ளிய பேருந்து…!

காரைநகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து மீசாலைப் பகுதியில் இளைஞர் ஒருவரை மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
பாடசாலை ஒன்றின் மரதன் ஓட்டப்போட்டி இன்று(01) காலை நடைபெற்றது.
இதன்போது, மரதன் ஓடிய வீரருக்கு உற்சாகம் ஊட்டுவதற்காக அவருக்கு அருகே குறித்த இளைஞன் துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.
இந்நிலையில் மீசாலை பகுதியில் வைத்து அவர் மீது பேருந்து மோதியது.
இளைஞனை மோதிய பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தென்னை மரத்தையும் மரத்தையும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை குறித்த பேருந்தின் சாரதி சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!