வடமாகாண ஆளுநருக்கும் இந்திய துணை தூதுவருக்கும் இடையே விசேட சந்திப்பு!

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்ஸை நேற்று  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஆளுநர் செயலகத்தில்  நடைபெற்ற இச்சந்திப்பில்  வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் வட  மாகாண ஆளுநர் இந்திய துணைத் தூதுவருக்கு தெளிவுப்படுத்தினார்.
இதனையடுத்து வட மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக வழங்கப்படும் என புதிய இந்திய துணைத் தூதுவர் உறுதி அளித்ததுடன் இளைஞர், யுவதிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சிகளை பெற்றுக்கொடுக்கவும், தீவுகளுக்கான படகு சேவையை விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன்  சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான வசதிகளை ஒழுங்கு செய்வதுடன், தரை மற்றும் கரையோர தூய்மை திட்டத்திற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும், தூய்மை திட்டத்திற்கு தேவையான நிதியை இந்திய துணை தூதரகத்திலிருந்து ஒதுக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும்  இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!