கணவனுக்கு போதைப்பொருள் கொடுத்த மனைவி கைது!

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை இரகசியமாக கொடுக்க முயன்ற மனைவி  நேற்றைய தினம் (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜபயாகல முலட்டியன பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் தனது கணவனுக்கு கொடுப்பதற்காகக் கொண்டுவந்த  கோழி இறைச்சிச்  பொதியை பொலிஸார் சோதனையிட்டபோதே இச்சம்பவம் அம்பலமாகியுள்ளது.  இதன்போது குறித்த பொதிக்குள் இருந்து   550 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!